Warning: mysql_num_rows() expects parameter 1 to be resource, boolean given in /home/ipboard/cache/skin_cache/cacheid_1/skin_downloads.php on line 1127 Tamil Red Letter Bible - Bible Support

Jump to content

Submitter



File Information

  • Submitted: Aug 06 2019 10:18 PM
  • Last Updated: Aug 06 2019 10:18 PM
  • File Size: 60.59MB
  • Views: 2133
  • Downloads: 231
  • Author: O.V
  • e-Sword Version: 9.x - 10.x
  • Tab Name: LAPTOP

Support BibleSupport.com

  • If our e-Sword and MySword modules have blessed you, please consider a small donation.


    Your donation pays only for dedicated server hosting, bandwidth, software licenses, and capital equipment (scanners, OCR equipment, etc).


    Enter Amount $


    You do not need a paypal account to donate online.



    Bitcoin Donation Address: bc1qx7trpwumqwr8eyulwehxsz4cxyzkhj6yxhgrmq

Other Modules By Same Author

Download Tamil Red Letter Bible 1.0

* * * * * 3 Votes
Screenshots
Author:
O.V

e-Sword Version:
9.x - 10.x

Tab Name:
LAPTOP


சீர்திருத்த சபையார் கண்காணிப்பில் இன்னுமொரு விவிலியத் திருப்புதல் நிகழ்ந்தது. அது பவர் திருப்புதல் (Bower Version) என்று அழைக்கப்படுகிறது.

18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆக்கப்பட்ட சீகன்பால்கின் மொழிபெயர்ப்பு, அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் ஃபெப்ரீசியுசால் செய்யப்பட்ட அதன் திருத்தம், இரேனியசு செய்த திருத்தம் என்று பல தமிழ் விவிலியத் திருப்புதல்கள் சீர்திருத்த சபைக் கிறித்தவர் நடுவே புழக்கத்தில் இருந்தன. குறிப்பாக, ஃபெப்ரீசியுசின் பெயர்ப்பினை திருநெல்வேலி எஸ்.பி.ஜி. (SPG - Socieyt for the Propagation of the Gospel) சபைகள் சிலவும், தஞ்சை, சென்னை சபைகளும் அனைத்தும், லைப்சிக் லூத்தரன் சபையும் பயன்படுத்தின. இரேனியசின் திருத்தத்தை சி.எம்.எஸ். (CMS - Church Mission Society), எல்.எம்.எஸ். (LMS - London Missionary Society), வெஸ்லியன் சபை (Wesleyan Church), அமெரிக்கன் போர்டு மிஷன் சபை (American Board of Commissioners for Foreign Missions (ABCFM) ஆகியவை பயன்படுத்தின.

இவை தவிர, இலங்கையில் செய்யப்பட்ட பெர்சிவல் திருப்புதலும் பரிசோதனைப் பதிப்பாக இருந்துவந்தது. அது ஃபெப்ரீசியுசு ஆதரவாளர்களுக்கும் பிடிக்கவில்லை, இரேனியசு ஆதரவாளர்களுக்கும் ஏற்புடையதாக இல்லை.

ஃபெப்ரீசியுசு திருப்புதல் ஒருபக்கம், இரேனியுசு திருப்புதல் மறுபக்கம் என்றிருந்ததால், சீர்திருத்த சபைகள் அனைத்தும் ஏற்கும் விதத்தில் ஒரு புதிய திருப்புதல் தேவை என்று உணரப்பட்டது. இது குறித்து சென்னை விவிலிய சங்கம் பல தீர்மானங்களை இயற்றியது. அதாவது, புதிய திருப்புதல் எல்லா முந்தைய திருப்புதல்களின் சிறப்புகளையும் கொண்டதாய் அமைய வேண்டும்; திருப்புதல் குழு ஏற்கப்பட்ட பாடம் (Textus Receptus) என்னும் கிரேக்க புதிய ஏற்பாட்டை மூல பாடமாகக் கொள்ள வேண்டும்; ஃபெப்ரீசியுசு திருப்புதலை அடிப்படையாகக் கொள்ளவேண்டும்; எஸ்.பி.ஜி. அமைப்பைச் சார்ந்த மறைபரப்பாளரான ஹென்றி பவர் (1813-1889)என்பவர் முக்கிய மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட வேண்டும்.

இத்தீர்மானங்களின் அடிப்படையில் ஹென்றி பவர் விவிலியத் திருத்தப் பணியைத் தொடங்கினார். இவர் ஃபிரான்சுவா பூவியே (François Bouvier) என்னும் பிரெஞ்சுப் போர்வீரருக்கும் ஜஸ்டீனா (Justina) என்னும் இந்தியப் பெண்மணிக்கும் மகனாகப் பிறந்தவர். தமிழில் நல்ல புலமை பெற்றவர். 1832-1837 ஆண்டுகளில் இங்கிலாந்தில் கல்வி பயின்றார். இந்தியா திரும்பியபின், 1845இலிருந்து குருவாகப் பணிபுரிந்தார். கிரேக்கம், எபிரேயம், இலத்தீன், வடமொழி போன்ற பல மொழிகளைக் கற்ற ஹென்றி பவர் தமிழில் சிறப்பான இலக்கியப் பணி ஆற்றியுள்ளார்.

1858ஆம் ஆண்டு ஹென்றி பவர் விவிலிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். புதிய ஏற்பாட்டு நூல்களை ஒவ்வொன்றாகத் தமிழில் பெயர்த்து அவற்றை மொழிபெயர்ப்புக் குழுவினருக்கும் பிற அறிஞருக்கும் அனுப்பி, அவர்களது கருத்துக்களைப் பெற்றுக்கொண்டார். லூத்தரன் சபை தவிர பிற எல்லா சீர்திருத்த சபைகளும் இம்மொழிபெயர்ப்பில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இராபர்ட் கால்டுவெல், மீரோன் வின்சுலோ போன்ற தலைசிறந்த அறிஞர்கள் மொழிபெயர்ப்பில் உதவினர். யாழ்ப்பாணத்தவர் சில விமரிசனங்களை அனுப்பினர்.

பவர் குழுவினர் உருவாக்கிய புதிய ஏற்பாடு 1864இலும், பழைய ஏற்பாடு 1867இலும் அச்சிடப்பட்டு வெளியாயின. பல கிறித்தவ சபைகள் இணைந்து உருவாக்கியதால் இது ஐக்கிய திருப்புதல் (Union Version) எனவும் அழைக்கப்படுகிறது. லூத்தரன் சபையினர் தவிர ஏனைய சீர்திருத்த சபையினர் இன்றுவரை இம்மொழிபெயர்ப்பைத் தம் வழிபாடுகளின் பயன்படுத்துகின்றனர். லூத்தரன் சபையினர் நடுவே ஃபெப்ரீசியுசின் மொழிபெயர்ப்பு வழங்கிவருகிறது.

பவர் மொழிபெயர்ப்பில் பங்கேற்ற கிறித்தவ மறைபரப்பாளருக்கு உதவியாக முத்தையா பிள்ளை, இராசகோபால ஐயர் ஆகிய தமிழறிஞர்கள் இருந்து தமிழ்நடைக்கு மெருகூட்டினர். முத்தையா பிள்ளை என்பவர் இரட்சணிய யாத்திரிகம் பாடிச் சிறப்படைந்த என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை என்பவரின் உடன்பிறப்பு என்பது கருதத்தக்கது.

பவர் திருப்பத்திலும் குறைகள் இருந்தன. கடவுளைக் குறிக்க தேவன் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டது. மோசே, பேதுரு போன்ற விவிலியப் பெருமக்கள் அவன், இவன் என்று குறிக்கப்பட்டனர். மொழிநடையில் ஒருவித அன்னியத் தன்மை காணப்பட்டது. இக்குறைகளை நீக்கும் வண்ணம் புதியதொரு திருப்பம் தேவை என்று உணரப்பட்டது.



Other files you may be interested in ..





27 user(s) are online (in the past 30 minutes)

2 members, 16 guests, 0 anonymous users


Facebook (9), waynesdomain, Slavu daniel